Apr 1, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் எல்லைப் பகுதிகள் மேம்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் எல்லைப் பகுதிகள் மேம்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.08-

பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு எல்லைப் பகுதிகளை மலேசியா மேம்படுத்தவிருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஆசியான் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக தீபகற்ப மலேசியாவில் வடப் பகுதியில் தாய்லாந்துடன் ஒட்டிய எல்லைப் பகுதி மற்றும் சபா, சரவாவில் காலிமந்தானுடன் ஒட்டிய எல்லைப் பகுதி ஆகியவற்றை மேம்படுத்த மலேசியா உறுதிப்பாடு கொண்டுள்ளது.

இதன் மூலம் எல்லைகளில் இரு பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பொருளாதார நடவடிக்கை வாயிலாக நன்மைப் பெற முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இதற்கு சிறந்த சான்று, ஜோகூருக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதியாகும் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.

இன்று கோலாலம்பூரில் 2025 ஆம் ஆண்டின் ஆசியான் முதலீட்டு மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்துகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்