1 எம்.டி.பி ஊழல் மீதான புலன் விசாரயில் உதவுவதற்கு மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ள Goldman Sachs முன்னாள் வங்கியாளர் ரோஜர் எங் சோங் ஹ்வா வை அரச மலேசிய போலீஸ் படை விசாரணை செய்யத் தொடங்கிருப்பதாக அதன் தலைவர் தான் ஶ்ரீ ரஸாருதீன் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக ஐஜிபி.யிடம் பெர்னாமா தொடர்பு கொண்ட போது இதனை உறுதிபடுத்தினார். ரோஜர் எங் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டதை உறுதிபடுத்திய போலீசார், அவர் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை வெளியிட மறுத்து விட்டார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ரோஜர் எங் எங்கு இருக்கிறார் எனற தகவலை தற்போது வெளியிட இயலாது என்று ரஸாருதீன் குறிப்பிட்டார்.
மலேசியாவின் முதலீட்டுக்கரமான 1 எம்.டி.பி நிறுவனத்திற்குச் சொந்தமான பல கோடி டாலர்களைச் சுருட்டுவதில் உதவியாக இருந்த காரணத்திற்காக அமெரிக்கா, நியூயோர்க் நீதிமன்றதில் ரோஜர் எங் கிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதே குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்காக அந்த முன்னாள் வங்கியாளர் தற்போது மலேசியாவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.








