Aug 12, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு சந்தேகப் பேர்வழிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு சந்தேகப் பேர்வழிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Share:

நீலாய், மே.19-

இரண்டு சந்தேகப் பேர்வழிகள், நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் நேற்று முன் தினம் சுட்டுக் கொல்லப்பட்டதை போலீசார் இன்று உறுதிப்படுத்தினர்.

இந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் கடந்த ஆண்டில் நான்கு மாநிலங்களில் 70 க்கு மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மேலாக குண்டர் கும்பல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறைத் துணை இயக்குநர் டத்தோ பாஃடீல் மார்சுஸ் தெரிவித்தார்.

வீடமைப்புப் பகுதிகள், பொருள் பட்டுவாடா மையங்கள், 24 மணி நேரக் கடைகள் என்று இலக்குக்கு உரிய இடங்களில் கொள்ளை நிகழ்த்துவதில் கைத்தேர்ந்தவர்களான இவ்விருவரும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், கோலாலம்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் இந்தக் கும்பல், பத்து லட்சம் ரிங்கிட்டிற்கு மேல் களவாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்களுடன் தொடர்புடைய நபர்கள் என்று நம்பப்படும் மேலும் சிலருக்கு போலீசார் வலைவிரித்து, தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருப்பதாக டத்தோ பாஃடீல் மார்சுஸ் தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்