Mar 15, 2026
Thisaigal NewsYouTube
அதிகரித்து வரும் ஜொகூர் வெள்ளப்பெருக்கு
தற்போதைய செய்திகள்

அதிகரித்து வரும் ஜொகூர் வெள்ளப்பெருக்கு

Share:

ஜொகூர் பாரு, ஜன - 8

ஜொகூரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,417 ஆக உயர்வு கண்டுள்ளன. வெள்ளத்தில் பாதிப்படைந்த 6 இடங்களில் உள்ளவர்கள் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தா திங்கி இருப்பிடம் மேலும் வெள்ளத்தால் பாதிப்படைந்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை குழுத்தலைவர் தான் ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்தார்.

நிலவரப்படி, இன்று காலை 10 மணி வரையில் கோத்தா திங்கியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 24 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அஸ்மி ரொஹானிஅறிவித்தார்.

ஜொகூர் பாரு,குலாய்,பொந்தியான், பத்து பாஹாட், முவார் மற்றும் தங்காக் ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என மஞ்சள் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News