Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கண்டிக்கப்பட்டதைத் திறந்த மனதுடன் ஏற்கிறேன்: ஊடகங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கத் தயார்!
தற்போதைய செய்திகள்

கண்டிக்கப்பட்டதைத் திறந்த மனதுடன் ஏற்கிறேன்: ஊடகங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கத் தயார்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.02-

அண்மையில் நடைபெற்ற I Lite U நிகழ்வின் செய்தியாளர்கள் கூட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் தாம் கண்டிக்கப்பட்டதைத் திறந்து மனதுடன் ஏற்றுக் கொள்வதாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

நடந்த தவற்றை ஒரு படிப்பிணையாகத் தாம் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் இந்நாட்டில் உள்ள ஊடகங்களின் சுதந்திரத்தைத் தொடர்ந்து மதித்து வருவதில் தாம் உறுதி பூண்டு இருப்பதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

ஒரு தலைவர் என்ற முறையில் எந்தவொரு தரப்பினரின் குறிப்பாக மடானி அரசாங்கத்தின் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றி வரும் ஊடகவியலாளர்களைப் புண்படுத்தும் வகையில் தாம் நடந்து கொண்டதில்லை என்பதையும் ங்கா தெளிவுபடுத்தினார்.

அதே வேளியில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் தகவல்களை மக்களுக்குக் கொண்டுச் சேர்ப்பதில் ஊடகவியலாளர்கள் ஆற்றி வரும் பங்களிப்புக்கு தமது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக தமது முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ங்கா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஊடகவியலாளர்களைப் பணிவன்புடன் சந்திப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். விரைவில் அவர்களைச் சந்திப்பேன் என்று ங்கா தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை