Aug 19, 2026
Thisaigal NewsYouTube
தாக்குதலால் மாணவரின் செவித்திறன் பாதிப்பு அபாயம்
தற்போதைய செய்திகள்

தாக்குதலால் மாணவரின் செவித்திறன் பாதிப்பு அபாயம்

Share:

ஷா ஆலாம் வட்டாரத்தில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட பகடியைத் தொடர்ந்து மூன்றாம் படிவ மாணவரைத் தாக்கியதாகக் கூறப்படும் 17 வயது மூத்த மாணவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பள்ளியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், தாக்குதலுக்கு உள்ளான மூன்றாம் படிவ மாணவரின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டதுடன், அவரது செவித்திறனும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே ஏற்பட்ட பகடியே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மாணவர் பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டாலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

மருத்துவ அதிகாரியின் அதிகாரப்பூர்வ அறிக்கை கிடைத்த பின்னரே மாணவரின் காயத்தின் உண்மையான தன்மை குறித்து தெரிவிக்க முடியும் என்றும் ஷாசெலி கஹார் கூறினர்.

இவ்வழக்கு, குற்றவியல் மிரட்டல் மற்றும் காயம் ஏற்படுத்திய குற்றங்களின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.

Related News

சூதாட்டத் தடைக்கு வழி தேடாதீர்; முஸ்லிம்கள் சூதாடுவதைத் தடுக்க கவனம் செலுத்துங்கள்! – சனுசிக்கு ராம்கர்பால் பதிலடி

சூதாட்டத் தடைக்கு வழி தேடாதீர்; முஸ்லிம்கள் சூதாடுவதைத் தடுக்க கவனம் செலுத்துங்கள்! – சனுசிக்கு ராம்கர்பால் பதிலடி

சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மற்றும் நலனை வலுப்படுத்தும் கெசுமா - டத்தோஸ்ரீ ரமணன்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மற்றும் நலனை வலுப்படுத்தும் கெசுமா - டத்தோஸ்ரீ ரமணன்

கடல் வழி மனிதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு-மஞ்சோங் கடற்பகுதியில் 108 பேர் கைது

கடல் வழி மனிதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு-மஞ்சோங் கடற்பகுதியில் 108 பேர் கைது

50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு

50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு

1,823 கிலோ மானிய சமையல் எண்ணெய் பறிமுதல்

1,823 கிலோ மானிய சமையல் எண்ணெய் பறிமுதல்

மலேசியர்கள் உட்பட பாகிஸ்தானில் சிக்கிய மாபெரும் இணைய மோசடிக் கும்பல் / விசாரணைக்காக இஸ்லாமாபாத் விரைந்தது சிறப்புப் படை

மலேசியர்கள் உட்பட பாகிஸ்தானில் சிக்கிய மாபெரும் இணைய மோசடிக் கும்பல் / விசாரணைக்காக இஸ்லாமாபாத் விரைந்தது சிறப்புப் படை