Apr 20, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் கோத்தா திங்கியில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி
தற்போதைய செய்திகள்

ஜோகூர் கோத்தா திங்கியில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி

Share:

ஜோகூர் மாநிலம், கோத்தா திங்கி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று பிற்பகல் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் இரு உள்ளூர் ஆடவர்களும், ஒரு வெளிநாட்டு பெண்ணும் உயிரிழந்ததாக மாநில போலீஸ் தலைவர் அப் ரஹ்மான் அர்சாட் தெரிவித்துள்ளார்.

37 முதல் 63 வயதுள்ள அம்மூவரும், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தாக்குதலில் ஷாட்கன் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதேவேளையில், இந்த சம்பவம் தொடர்பாக 71 வயதுடைய ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அவர் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

செராஸில் கடத்தல் சம்பவம்: ஏர்பிஎன்பி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சீன நாட்டவர் மீட்பு

செராஸில் கடத்தல் சம்பவம்: ஏர்பிஎன்பி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சீன நாட்டவர் மீட்பு

பாடாங் மேஹாவில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை - 16 வெளிநாட்டவர்கள் கைது!

பாடாங் மேஹாவில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை - 16 வெளிநாட்டவர்கள் கைது!

லங்காவி படகு சேவைக் குறைப்பு : பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண அரசுக்கு கோரிக்கை

லங்காவி படகு சேவைக் குறைப்பு : பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண அரசுக்கு கோரிக்கை

சண்டக்கான் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட 248 பேருக்கு, 6 நிவாரண மையங்கள்

சண்டக்கான் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட 248 பேருக்கு, 6 நிவாரண மையங்கள்

இந்தியத் தொழில் முனைவர்களுக்கும், சமூகத்தினருக்கும் உதவ 220 மில்லியன் ரிங்கிட்  'MUDRA' (முட்ரா) பொருளாதார நிதித் திட்டம்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

இந்தியத் தொழில் முனைவர்களுக்கும், சமூகத்தினருக்கும் உதவ 220 மில்லியன் ரிங்கிட் 'MUDRA' (முட்ரா) பொருளாதார நிதித் திட்டம்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

லாரி - சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 8 பேர் காயம்!

லாரி - சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 8 பேர் காயம்!