Jul 1, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் கோத்தா திங்கியில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி
தற்போதைய செய்திகள்

ஜோகூர் கோத்தா திங்கியில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி

Share:

ஜோகூர் மாநிலம், கோத்தா திங்கி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று பிற்பகல் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் இரு உள்ளூர் ஆடவர்களும், ஒரு வெளிநாட்டு பெண்ணும் உயிரிழந்ததாக மாநில போலீஸ் தலைவர் அப் ரஹ்மான் அர்சாட் தெரிவித்துள்ளார்.

37 முதல் 63 வயதுள்ள அம்மூவரும், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தாக்குதலில் ஷாட்கன் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதேவேளையில், இந்த சம்பவம் தொடர்பாக 71 வயதுடைய ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அவர் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி