பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சனிக்கிழமை கெடா, அலோர் ஸ்டாரில் நடத்திய ஹரிராய திறந்த இல்ல பொது உபசரிப்பில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர். இவ்வாண்டு ஹரிராயாவையொட்டி பிரதமர் 6 இடங்களில் நடத்தவிருக்கும் பொது உபசரிப்பின் முதலாவது நிகழ்வு இன்று அலோர் ஸ்டார், ஹோட்டல் ராஹியாவில் நடைபெற்று வருகிறது. ஹோட்டலின் வெளி வளாகத்தில் 5 பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்ட மிக பிரமாண்டபமான முறையில் பிரதமரின் பொது உபசரிப்பு நடைபெற்று வருகிறது.
பல வகையான உணவுப்பொருட்கள் வருகையாளர்களுக்கு பரிமாறப்பட்ட நிலையில் அனைவரையும் நலம் விசாரித்தவாறு பிரதமர் தமது ஹரிராயா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது நிகழ்வில் கலந்து கொண்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காலை 10.37 மணிக்கு இந்தப் பொது உபசரிப்பில் தனி நபராக கலந்து கொண்ட கெடா மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர், மத்திய அரசாங்க அமைச்சர்களுடன் கைகொடுத்து விட்டு, பின்னர் மேன்மை தங்கிய கெடா சுல்தான் மற்றும் பிரதமர் அன்வாருடன் ஒரே மேஜையில் அமர்ந்திருந்தார்.

Related News

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்


