பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சனிக்கிழமை கெடா, அலோர் ஸ்டாரில் நடத்திய ஹரிராய திறந்த இல்ல பொது உபசரிப்பில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர். இவ்வாண்டு ஹரிராயாவையொட்டி பிரதமர் 6 இடங்களில் நடத்தவிருக்கும் பொது உபசரிப்பின் முதலாவது நிகழ்வு இன்று அலோர் ஸ்டார், ஹோட்டல் ராஹியாவில் நடைபெற்று வருகிறது. ஹோட்டலின் வெளி வளாகத்தில் 5 பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்ட மிக பிரமாண்டபமான முறையில் பிரதமரின் பொது உபசரிப்பு நடைபெற்று வருகிறது.
பல வகையான உணவுப்பொருட்கள் வருகையாளர்களுக்கு பரிமாறப்பட்ட நிலையில் அனைவரையும் நலம் விசாரித்தவாறு பிரதமர் தமது ஹரிராயா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது நிகழ்வில் கலந்து கொண்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காலை 10.37 மணிக்கு இந்தப் பொது உபசரிப்பில் தனி நபராக கலந்து கொண்ட கெடா மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர், மத்திய அரசாங்க அமைச்சர்களுடன் கைகொடுத்து விட்டு, பின்னர் மேன்மை தங்கிய கெடா சுல்தான் மற்றும் பிரதமர் அன்வாருடன் ஒரே மேஜையில் அமர்ந்திருந்தார்.

Related News

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது


