May 6, 2026
Thisaigal NewsYouTube
மிதிவண்டி ஓட்டியவர் பலியான வழக்கு: இளம் ஓட்டுநர் குற்றத்தை மறுத்தார்
தற்போதைய செய்திகள்

மிதிவண்டி ஓட்டியவர் பலியான வழக்கு: இளம் ஓட்டுநர் குற்றத்தை மறுத்தார்

Share:

கூச்சிங்கில் கடந்த மே 1-ஆம் தேதி நடந்த விபத்து ஒன்றில், மிதிவண்டி ஓட்டியவர் உயிரிழந்த சம்பவத்தில், 19 வயது இளைஞர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

அவர் மீது சாலைப் போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41(1)ன் கீழ் மரணம் ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, இன்று புதன்கிழமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கின் முன் விசாரணை மேலாண்மை, வரும் ஜூன் 23-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த இளைஞரை, 20,000 ரிங்கிட் பிணைத் தொகை மற்றும் இருவரின் உத்திரவாதத்துடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related News