Jul 4, 2026
Thisaigal NewsYouTube
காதலியைக் கொன்ற இந்தியப் பிரஜைக்கு 35 ஆண்டுகள்  சிறை
தற்போதைய செய்திகள்

காதலியைக் கொன்ற இந்தியப் பிரஜைக்கு 35 ஆண்டுகள் சிறை

Share:

கோலாலம்பூர், ஜூலை.29-

கோலாலம்பூரில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் தனது காதலியுடன் பாலியல் தொடர்பு கொண்ட பின்னர் அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தக் குற்றத்திற்காக ஓர் இந்தியப் பிரஜைக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் அந்த நபருக்கு 12 பிரம்படித் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு டெக்னிஷனான 28 வயது பால்வின்டர் சிங்கிற்கு எதிரான குற்றச்சாட்டை பிராசிகியூஷன் தரப்பினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸார் அப்துல் ஹாமிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த இந்தியப் பிரஜை, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் கோலாலம்புர், புக்கிட் பிந்தாங், ஜாலான் அலோரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 36 வயதுடைய தனது காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது