Aug 7, 2026
Thisaigal NewsYouTube
விளையாட்டு மைதானத்தில் சிறுவர்களைக் குறிவைத்த பாலியல் கொடூரன் கைது
தற்போதைய செய்திகள்

விளையாட்டு மைதானத்தில் சிறுவர்களைக் குறிவைத்த பாலியல் கொடூரன் கைது

Share:

மலாக்கா, தாமான் தேசா துயோங் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில், 8 முதல் 13 வயதுடைய சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நம்பப்படும் 36 வயது தொழிலதிபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தைப் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்துப் பேசிய மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார், இந்தச் சந்தேக நபர் இதுவரை 10 சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்குகளுடன் தொடர்புடையவர் என்று தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானம் மற்றும் சுராவுக்கு வரும் சிறுவர்களிடம் நயமாகப் பேசி பழகி, இந்த அத்துமீறல்களை அவர் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கை வன்கொடுமை செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் மீது 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி