கடந்த திங்கட்கிழமை, ஒரு தம்பதியினரால், பணம் பட்டுவாட அட்டை ஒன்று களவாடப்பட்டதில், பணி ஓய்வுப் பெற்ற முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் 46 ஆயிரம் வெள்ளியை இழந்தார்.
அத்தம்பதியினர், அந்தப் பணப்பட்டுவாடா அட்டையைப் பயன்படுத்தி விலை மதிப்புடைய தொலைபேசி ஒன்றை வாங்கிய போது, அவர்களின் அடையாளம் அக்கடையின் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி, காலை 10 மணியளவில், அந்த முன்னாள் அரசாங்க ஊழியரின் ஏடிஎம் அட்டை, பந்திங்கில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டதையடுத்து, வங்கிக்கு வந்த அறிமுகமில்லாத நபர் ஒருவர், உதவி செய்வதாகக் கூறி அந்த ஏடிஎம் அட்டையைத் திருடிச் சென்றதாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதென்டன் அகமட் ரிட்வான் முகமட் நூர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில், 1997 கணினி குற்றவியல் சட்டம் பிரிவு 4 கின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அகமட் ரிட்வான் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


