Mar 27, 2026
Thisaigal NewsYouTube
நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் டத்தோஸ்ரீ பழனிவேல் உடல் தகனம்
தற்போதைய செய்திகள்

நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் டத்தோஸ்ரீ பழனிவேல் உடல் தகனம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.19-

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் நல்லுடல், நூற்றூக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன், கோலாலம்பூர், செந்தூல் சிவன் கோவில் அருகில் உள்ள இந்து மயானத்தில் பிற்பகல் 4 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

மஇகா உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அதிகமானோர் இறுதிச்ச கலந்து கொண்டு மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவருக்கு பிரியாவிடை தந்தனர்.

முன்னதாக, கோலாலம்பூர் பங்சாரில் உள்ள பழனிவேலின் இல்லத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் அதிகமானோர் கலந்து கொண்டு பழனிவேலின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, பழனிவேலின் இல்லத்திற்கு நேரடியாக வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தியதுடன், பழனிவேலின் துணைவியார் டத்தின்ஸ்ரீ கனகத்திற்கு தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

இதே போன்று பழனிவேலின் நெருங்கிய நண்பரும், 1990 ஆம் ஆண்டு முதல் முறையாக உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றப் பின்னர் ஓர் இயக்குநராக நியமிக்கப்பட்ட பெர்ஜெயா குரூப்பின் நிர்வாகத் தலைவரும், கோடீஸ்வரருமான டான்ஸ்ரீ வின்சண்ட் டான், பழனிவேலின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

பழனிவேலின் பிரேதப் பெட்டி மீது மஇகா கொடி போர்த்தப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. பழனிவேலின் விருப்பப்படி அவரின் உடல், செந்தூல் சிவன் கோவில் அருகில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை