Sep 3, 2026
Thisaigal NewsYouTube
கோவையில் மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் வெட்டு - துப்பாக்கி முனையில் மிரட்டல்
தற்போதைய செய்திகள்

கோவையில் மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் வெட்டு - துப்பாக்கி முனையில் மிரட்டல்

Share:

தமிழகத்தின் கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, மலேசியாவைச் சேர்ந்த 52 வயது லோகநாதன் மற்றும் அவரது 21 வயது மகன் யுகேந்திரன் ஆகியோர் அடையாளம் தெரியாத இருவரால் அரிவாளால் தாக்கப்பட்டனர்.

காயமடைந்த இருவரும் மதுக்கரை-யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மதுக்கரை போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி, 11 மலேசிய சுற்றுலாப் பயணிகள் கேரளாவின் ஆலப்புழா-வில் இருந்து சென்னை நோக்கி வாடகை வேனில் சென்று கொண்டிருந்தனர்.

மாலை சுமார் 5.30 மணியளவில் கொச்சின்–சேலம் விரைவுச் சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே வேன் நிறுத்தப்பட்ட போது, சாலையில் இருந்த இருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.

இதனையடுத்து அவர்கள் லோகநாதன் மற்றும் யுகேந்திரன்-ஐ அரிவாளால் தாக்கியதுடன், வேனின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு ஓட்டுநர் வேனை மதுக்கரை நோக்கி வேகமாக ஓட்டிச் சென்றார். ஆனால், இருவரும் இருசக்கர வாகனத்தில் வேனைத் துரத்திச் சென்று மதுக்கரை சந்தைப் பகுதியில் மீண்டும் வழிமறித்தனர்.

இந்நிலையில், அவர்களில் ஒருவர் துப்பாக்கி போன்ற பொருளைக் காட்டியதால் ஓட்டுநர் வேனை நிறுத்தியுள்ளார்.

எனினும், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அங்கு திரண்டதும் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொச்சின்–சேலம் விரைவுச்சாலைப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி
காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related News

ஓடும் காரில் இரு சிறுமிகள் ஆபத்தான சாகசம் – பேராக் போலீஸ் விசாரணை

ஓடும் காரில் இரு சிறுமிகள் ஆபத்தான சாகசம் – பேராக் போலீஸ் விசாரணை

குழந்தைகள் வளர்ச்சி குன்றல் அதிகரிப்பு: தேசிய அளவிலான உணவுத் திட்டத்தை அறிமுகப்பட்ட முன்னாள் எம்பி கோரிக்கை

குழந்தைகள் வளர்ச்சி குன்றல் அதிகரிப்பு: தேசிய அளவிலான உணவுத் திட்டத்தை அறிமுகப்பட்ட முன்னாள் எம்பி கோரிக்கை

16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது சிறந்தது/ பிரதமர் அன்வாருக்கு சாஹிட் ஹமீடி கோரிக்கை

16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது சிறந்தது/ பிரதமர் அன்வாருக்கு சாஹிட் ஹமீடி கோரிக்கை

30 ஆயிரம் சிறார் ஆபாச காணொளிகளுடன் ஆடவர் கைது - தங்கள் ஊழியர் அல்ல என யுகேஎம் விளக்கம்

30 ஆயிரம் சிறார் ஆபாச காணொளிகளுடன் ஆடவர் கைது - தங்கள் ஊழியர் அல்ல என யுகேஎம் விளக்கம்

3 வயது சிறுவன் உயிரிழப்பு: விக்டோரியா பாலம் தற்காலிக மூடல் - பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு

3 வயது சிறுவன் உயிரிழப்பு: விக்டோரியா பாலம் தற்காலிக மூடல் - பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு

கிளந்தானில் காட்டு யானை அட்டகாசம்: மனிதர்–வனவிலங்கு மோதல் அச்சம் அதிகரிப்பு

கிளந்தானில் காட்டு யானை அட்டகாசம்: மனிதர்–வனவிலங்கு மோதல் அச்சம் அதிகரிப்பு