மலேசியாவில் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நாவுக்கு சுவையூட்டும் திருவிழா சாப்பாட்டிற்குப் பிரசித்திப் பெற்ற சீனி சட்டி சோறு உணவகம், சிங்கப்பூரில் தனது முதலாவது உணவகத்தைத் திறந்துள்ளது.
இதன் திறப்பு விழா கடந்த மே முதல் தேதி திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் எண் 30, நோரீஸ் ரோட், லிட்டல் இந்தியா, சிங்கப்பூர் என்ற முகவரியில் திறப்பு விழா கண்டது. இதனை சீனி சட்டி சோறு உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசகத்தின் தாயார் ஜானகியும், பெரியம்மாள் மாரியம்மாவும் இணைந்து திறந்து வைத்தனர்.
மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு தொடங்கி, வாடிக்கையாளர்களின் அபரிமித ஆதாரவினால், கடந்த 5 ஆண்டுகாலமாக வெற்றி நடைப்போட்டு 18 கிளை உணவகங்களைக் கொண்டுள்ள சீனி சட்டி சோறு, தனது 19 ஆவது கிளை உணவகமாக சிங்கப்பூரில் தற்போது கால் பதித்துள்ளது.
திருவிழா சாப்பாடு மற்றும் சட்டி சோற்றை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் சீனி சட்டி சோறு உணவகம், பிரத்தியேகமாக சிங்கப்பூரில் திறப்பு விழா கண்டுள்ளது.
இத்திறப்பு விழாவில் சிங்கப்பூரின் பிரபல பாடகி ஷாக்ஷி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.








