Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சம்பந்தப்பட்ட இளைஞர் ஓர் இந்துவே, உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

சம்பந்தப்பட்ட இளைஞர் ஓர் இந்துவே, உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Share:

ஈப்போ, செப்டம்பர்.24-

தம்மை ஓர் இந்துவாக அங்கீகரிக்கக் கோரி, 26 வயது இளைஞர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்த ஈப்போ உயர் நீதிமன்றம், அந்த இளைஞர் ஓர் இந்துவே தவிர முஸ்லிம் அல்ல என்று தீர்ப்பளித்தது.

அந்த இளைஞர் ஒரு முஸ்லிம் என்பதற்கு எந்தவோர் ஆதாரமும் இல்லை என்று நீதிபதி பூபிண்டர் சிங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

தம்மை ஓர் இந்துவாக அறிவிக்கக் கோரி, தேசிய பதிவு இலாகா மற்றும் பேரா மாநில இஸ்லாமிய சமய இலாகாவிற்கு எதிராக அந்த இளைஞர் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

பேரா மாநில சமய இலாகாவின் குறிப்பின்படி அந்த இளைஞர் இஸ்லாத்தில் தழுவியதற்கான எந்தவொரு சான்றும் இல்லை என்று சமய இலாகா அதிகாரி உறுதிப்படுத்தியிருப்பதையும் நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.

தெலுக் இந்தானில் பிறந்து வளர்ந்தவரான அந்த இளைஞரின் தந்தை மதம் மாறிய போதிலும், ஓர் இந்துவான தாயாரின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார் என்பதற்கான ஆதாரம் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து