Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அரிசியை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

அரிசியை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை

Share:

அரிசி விலையேற்றம், அரிசி தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்நோக்கியுள்ள நி​லையில் அரிசியை பதுக்கி வைக்கும் நபர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரிசியின் தேவையும், விநியோகமும் மக்களுக்காகவே தவிர பதுக்கி வைப்பதற்காக அல்ல என்பதை பிரதமர் தெளிவுபடுத்தினார்.

அரிசி பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டு பிடிக்கப்ப்டடால் எவ்வித தயவு தாட்சனையின்றி நேரடியாக நீதிமன்றத்தில் குற்ற​ஞ்சாட்டப்படுவர் என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.

Related News