நவ. 24-
கெடா மாநில அரசு ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்க உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகை, 5,376 அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது என ம்மாநில முதல்வர் Sanusi Nor அறிவித்துள்ளார்.
இந்த உதவித்தொகை வரும் மார்ச் மாதம், ஜூன் மாதம் என இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக மொத்தம்.12 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சனுசி தெரிவித்தார்.
மேலும், கெடா மாநில அரசு, அதன் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவையும் எடுத்துள்ளது. இதற்காக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த முடிவுகள் அனைத்தும், மாநில அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சனுசி குறிப்பிட்டார்.








