Sep 7, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் லிடோ கடற்கரையில் புல்வெளியில் தீ - குடியிருப்பாளர்கள் பீதி
தற்போதைய செய்திகள்

ஜோகூர் லிடோ கடற்கரையில் புல்வெளியில் தீ - குடியிருப்பாளர்கள் பீதி

Share:

ஜோகூர், கண்ட்ரி கார்டன் அருகே உள்ள லிடோ கடற்கரைப் பகுதியில் 1.2 ஹெக்டேர் பரப்பளவிலான லாலாங் புல்வெளியில் நேற்று இரவு திடீரென தீப்பற்றியது.

தீப்பிழம்புகள் வானத்தை ஒளிரச் செய்ததால், அருகிலுள்ள உயரமான ஆடம்பரக் குடியிருப்புகளில் வசித்தவர்கள் பீதியடைந்தனர்.

நேற்று இரவு 9.06 மணிக்கு தீப்பற்றிய நிலையில், லார்கின் மற்றும் தெப்ராவ் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் 14 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்தனர்.

ஆறு தீயணைப்பு வீரர்கள் அருகிலிருந்த நீர்வாயிலுடன் இணைக்கப்பட்ட 122 மீட்டர் நீள குழாய் மூலம் தீயை அணைத்தனர்.

இந்நிலையில், இரவு 11.35 மணிக்குள் தீயானது முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

திட்டம், நில பேரம் தொடர்பான எஸ்பிஆர்எம் விசாரணை: முன்னாள் ஃபெல்டா தலைமை நிர்வாகி நீதிமன்றத்தில் ஆஜர்

திட்டம், நில பேரம் தொடர்பான எஸ்பிஆர்எம் விசாரணை: முன்னாள் ஃபெல்டா தலைமை நிர்வாகி நீதிமன்றத்தில் ஆஜர்

காஜாங்கில் கார் துரத்தல் விபத்தில் முடிந்தது - போதைப்பொருளுடன் பெண் கைது, ஓட்டுநர் தப்பியோட்டம்

காஜாங்கில் கார் துரத்தல் விபத்தில் முடிந்தது - போதைப்பொருளுடன் பெண் கைது, ஓட்டுநர் தப்பியோட்டம்

கிளந்தான் - பேராக் வனப்பகுதி மலையேற்றம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், 2 வழிக்காட்டிகள் மாயம்

கிளந்தான் - பேராக் வனப்பகுதி மலையேற்றம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், 2 வழிக்காட்டிகள் மாயம்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது