Mar 14, 2026
Thisaigal NewsYouTube
காவற்படையை அவமதித்து, எச்சில் துப்பிய பெண்: தடுப்புக் காவல் நீட்டிப்பு – அதிரடி விசாரணை!
தற்போதைய செய்திகள்

காவற்படையை அவமதித்து, எச்சில் துப்பிய பெண்: தடுப்புக் காவல் நீட்டிப்பு – அதிரடி விசாரணை!

Share:

அலோர் ஸ்டார், ஜனவரி.02-

அலோர் ஸ்டார், மெர்கோங் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததுடன், தடுத்து நிறுத்த வந்த காவற்படை அதிகாரியிடம் அநாகரீகமான சைகை காட்டி, எச்சில் துப்பிய 34 வயது பெண்ணின் தடுப்புக் காவல் மேலும் ஒரு நாளைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோத்தா ஸ்டார் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் சையிட் பஸ்ரி சையிட் அலி தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை தனியார் நிறுவனம் ஒன்றில் புகுந்து அங்கிருந்தவரைத் தாக்கியதாகக் கூறப்படும் அந்தப் பெண், தகவலறிந்து வந்த காவற்படை அதிகாரியிடம் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார்.

மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் அந்தப் பெண் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் உள்ளிட்ட மூன்று கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் காவற்படை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் காவற்படையினர், நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்தக் காவலுக்குப் பிறகு அந்தப் பெண் மீது நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார்கள் சுமத்தப்பட வாய்ப்புள்ளது.

Related News