May 24, 2026
Thisaigal NewsYouTube
புராதான கட்டமாக அங்கீகரிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

புராதான கட்டமாக அங்கீகரிக்கப்பட்டது

Share:

சிலாங்கூர்,செப்டம்பர் 26-

நாட்டின் தாய்க்கோவிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கட்டடம், நாட்டின் புராதான கட்டடமாக அங்கீகரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் Jalan Tun H.S. Lee. யில் உள்ள 150 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் வளாகத்தை புராதான பகுதியாக 2005 ஆம் ஆண்டு தேசிய பாரம்பரிய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது..

இதற்கான அங்கீகார கடிதத்தை சுற்றலா, கலை, பண்பாட்டு அமைச்சின் தேசிய பாரம்பரிய இலாகாவின் பாரம்பரிய ஆணையம் வழங்கியுள்ளது என்று இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அறிவித்தார்.

புராதான கட்டட வளாகம் தொடர்பில் தேவஸ்தானத்தின் அனுமதி கேட்டு, ஓர் கடிதத்தை அந்த இலாகாவின் பாரம்பரிய ஆணையத்த்தின் ஆணையர் முகமது முடா பஹாடின் வழங்கியிருப்பதையும் அவர் டான்ஸ்ரீ நடராஜா சுட்டிக்காட்டினார்.

Related News