Apr 26, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் போதையில் மனைவி, பிள்ளைகளை 7 மணி நேரம் சிறை வைத்த தந்தை கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் போதையில் மனைவி, பிள்ளைகளை 7 மணி நேரம் சிறை வைத்த தந்தை கைது

Share:

தாவாவ், ஏப்ரல்.26-

தாவாவ், கலாபாக்கான் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில், போதைப்பொருள் போதையில் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் ஏழு மணி நேரம் சிறை வைத்து கொலை மிரட்டல் விடுத்த 39 வயது நபர் ஒருவரைப் காவற்படையினர் கைது செய்தனர். சினத்துடன் நடந்து கொண்ட அந்த நபர், தன்னைக் கட்டுப்படுத்த முயன்றவர்கள் மீது அரிவாளை வீசியதோடு, வீட்டிற்குள் நுழைபவர்களைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியதால், காவற்படையினர் சுமார் ஏழு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர் என தாவாவ் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் ஜஸ்மின் ஹுசேன் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்த முயன்ற அந்த நபரை முடக்க காவற்படை 'டேஸர்' (taser) துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது; அவரிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், தற்போது அவர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

காவற்படை அதிகாரி பணம் வாங்கும் வீடியோ காணொலி: ஈப்போ காவற்படை நிலையிலான விசாரணை

காவற்படை அதிகாரி பணம் வாங்கும் வீடியோ காணொலி: ஈப்போ காவற்படை நிலையிலான விசாரணை

உயர் உற்பத்தித் திறன் கொண்ட பொருளாதாரத்திற்கு மாறுவதே உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வழி - அகமட் ஸாஹிட்

உயர் உற்பத்தித் திறன் கொண்ட பொருளாதாரத்திற்கு மாறுவதே உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வழி - அகமட் ஸாஹிட்

பணியில் இருந்த அதிகாரியை அவமதித்த நபர்: காவற்படை விசாரணைத் தொடக்கம்

பணியில் இருந்த அதிகாரியை அவமதித்த நபர்: காவற்படை விசாரணைத் தொடக்கம்

மாணவி வினோசினி மரணம்: யுயுஎம் பல்கலைக்கழகத்திற்கு எதிரான தந்தையின் வழக்கு தள்ளுபடி

மாணவி வினோசினி மரணம்: யுயுஎம் பல்கலைக்கழகத்திற்கு எதிரான தந்தையின் வழக்கு தள்ளுபடி

பொது உயர்க்கல்விக் கூட சேர்க்கை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் -  டத்தோ ஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர்

பொது உயர்க்கல்விக் கூட சேர்க்கை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - டத்தோ ஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர்

லெக்காஸ் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இருவர் கைது

லெக்காஸ் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இருவர் கைது