Jun 16, 2026
Thisaigal NewsYouTube
17 வயது மாணவரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து: நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஆர்.எஸ்.என் ராயர் முடிவு
தற்போதைய செய்திகள்

17 வயது மாணவரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து: நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஆர்.எஸ்.என் ராயர் முடிவு

Share:

17 வயது மாணவர் ஒருவரின் உயிரை பறித்தராபிட் பினாங்கு பேருந்து விபத்து தொடர்பான விவகாரம் அடுத்த மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்பப்படும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு குறித்து போலீசாரும், சட்டத்துறை தலைமை அலுவலகமும், இதுவரை எந்த ஒரு தகவலும் வழங்காததால், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராயர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 24 முதல் இவ்வாண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி வரை, இது தொடர்பாக, போலீசாருக்கு மூன்று கடிதங்கள் அனுப்பப்பட்டதுடன், உயிரிழந்த மாணவரின் தாயாரும் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

என்றாலும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் ராயர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, நவம்பர் 13-ஆம் தேதி, காட் லெபு மக்கல்லம் பகுதியில் இருந்து பெர்சியாரான் கர்பால் சிங் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அம்மாணவர், ராபிட் பினாங்கு பேருந்து மோதி விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி