Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பிரம்படித் தண்டனை என்னைக் கொன்று விடும்

Share:

கோலாலம்பூர், பிப்.28-

கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து 30 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்கக்கப்பட்டுள்ள 36 வயது J. சிவச்சந்திரன் என்பவர், தனக்கு பிரம்படித் தண்டனை வேண்டாம் என்று கோரி, புதிய விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தனக்கு 12 பிரம்படித் தண்டனை கொடுக்கப்பட்டால் அத்தண்டனை, தன்னை கொன்று விடும் என்றும் அந்த தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் சிவசந்திரன் தனது சீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிவசந்திரன் மனு மீதான விண்ணப்பம், அடுத்த வாரம் திங்கட்கிழமை, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் மூவர் கொண்ட நீதிபதிகளால் விசாரணை செய்யப்படவிருக்கிறது.

பிரம்படித் தண்டனை தனக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும், தம்முடைய இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கெடா, போகோக் சேனா சிறைச்சாலையில் சைடி என்ற கைதிக்கு விதிக்கப்பட்ட பிரம்படித் தண்டனையினால் அந்த கைதிக்கு குடல் பகுதியில் ஏற்பட்ட வலியினால் இறந்து விட்ட சம்பவத்தை சிவசந்திரன் ஆதாரமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை