Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பிரம்படித் தண்டனை என்னைக் கொன்று விடும்

Share:

கோலாலம்பூர், பிப்.28-

கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து 30 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்கக்கப்பட்டுள்ள 36 வயது J. சிவச்சந்திரன் என்பவர், தனக்கு பிரம்படித் தண்டனை வேண்டாம் என்று கோரி, புதிய விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தனக்கு 12 பிரம்படித் தண்டனை கொடுக்கப்பட்டால் அத்தண்டனை, தன்னை கொன்று விடும் என்றும் அந்த தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் சிவசந்திரன் தனது சீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிவசந்திரன் மனு மீதான விண்ணப்பம், அடுத்த வாரம் திங்கட்கிழமை, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் மூவர் கொண்ட நீதிபதிகளால் விசாரணை செய்யப்படவிருக்கிறது.

பிரம்படித் தண்டனை தனக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும், தம்முடைய இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கெடா, போகோக் சேனா சிறைச்சாலையில் சைடி என்ற கைதிக்கு விதிக்கப்பட்ட பிரம்படித் தண்டனையினால் அந்த கைதிக்கு குடல் பகுதியில் ஏற்பட்ட வலியினால் இறந்து விட்ட சம்பவத்தை சிவசந்திரன் ஆதாரமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு