Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வாகனமோட்டும் தேர்வு, லஞ்சம் பெற்றதாக மூன்று பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

வாகனமோட்டும் தேர்வு, லஞ்சம் பெற்றதாக மூன்று பெண்கள் கைது

Share:

வாகனமோட்டும் லைசென்ஸ் சோதனையில் மாணவர்களிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் மூன்று பெண்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது. கணினி தேர்வில் அமரவிருந்த அந்த வாகனமோட்டும் பயிற்சி மாணவர்களை கட்டாயமாக தேர்ச்சி அடைய செய்வதாக கூறி லஞ்சம் பெற்றதாக அந்தப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளன..

அந்த மூன்று பெண்களில் இருவர், ஜோகூர், கோத்தா திங்கியில் அரசாங்க இலாகாவுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்கள் சேவைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற ஒருவர் வாகனமோட்டு பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

23 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் நேற்று இரவு 9 மணியளவில் ஜோகூர் மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். .

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு