Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் புதிய எச்ஐவி தொற்றுகள் 54% குறைந்துள்ளது - சுகாதார அமைச்சர் தகவல்!
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் புதிய எச்ஐவி தொற்றுகள் 54% குறைந்துள்ளது - சுகாதார அமைச்சர் தகவல்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

மலேசியாவில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையில், புதிதாக எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 விழுக்காடு குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு, மொத்தம் 3,185 பேர் புதிதாக எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியதாக குறிப்பிட்ட அவர், 2023-ஆம் ஆண்டின் 3,222 எண்ணிக்கையைக் காட்டிலும் இது குறைவு என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், கடந்த 2024-ம் ஆண்டு நிலவரப்படி, ஓரினச் சேர்க்கை மற்றும் இரு பாலின உறவுகள் மூலம் 2,037 பேர் புதிதாக எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், 2023-ஆண்டு இதன் எண்ணிக்கை 1995-ஆக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, 2023-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், அது 2 விழுக்காடு அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதே வேளையில், 2024-ஆம் ஆண்டில், ஊசியைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாக எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 77 பேர் என்றும், 2023-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 87 ஆகப் பதிவாகியிருந்ததாகவும் டாக்டர் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு