Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் புதிய எச்ஐவி தொற்றுகள் 54% குறைந்துள்ளது - சுகாதார அமைச்சர் தகவல்!
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் புதிய எச்ஐவி தொற்றுகள் 54% குறைந்துள்ளது - சுகாதார அமைச்சர் தகவல்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

மலேசியாவில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையில், புதிதாக எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 விழுக்காடு குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு, மொத்தம் 3,185 பேர் புதிதாக எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியதாக குறிப்பிட்ட அவர், 2023-ஆம் ஆண்டின் 3,222 எண்ணிக்கையைக் காட்டிலும் இது குறைவு என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், கடந்த 2024-ம் ஆண்டு நிலவரப்படி, ஓரினச் சேர்க்கை மற்றும் இரு பாலின உறவுகள் மூலம் 2,037 பேர் புதிதாக எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், 2023-ஆண்டு இதன் எண்ணிக்கை 1995-ஆக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, 2023-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், அது 2 விழுக்காடு அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதே வேளையில், 2024-ஆம் ஆண்டில், ஊசியைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாக எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 77 பேர் என்றும், 2023-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 87 ஆகப் பதிவாகியிருந்ததாகவும் டாக்டர் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்