நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கவிருக்கும் சித்திரைப் புத்தாண்டை மலேசிய மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதுடன், குடும்பங்கள் ஒற்றுமையாகவும் இறை வழிபாட்டுடனும் இந்த புத்தாண்டை வரவேற்க வேண்டும் என்று கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தமது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் செல்வதை மக்கள் தவற விடக்கூடாது. மேலும் நமது கலை, கலாச்சாரம், பாரம்பரியம், மரபு ஆகியவற்றை கட்டிக்காக்கும் அதேவேளையில் மலேசிய இந்தியர்களின் ஒற்றுமை, மேலும் வலுப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


