May 20, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் புகார்கள் அதிகரிக்கின்றன ஹடி ஆவாங்கிற்கு எதிராக
தற்போதைய செய்திகள்

போலீஸ் புகார்கள் அதிகரிக்கின்றன ஹடி ஆவாங்கிற்கு எதிராக

Share:

இந்த நாட்டில் மலாய்க்காரர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், பகிரங்கமாக ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் இனத்துவேச தன்மையில் பேசி வரும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி ஆவாங்கிற்கு எதிராக போலீஸ் புகார்கள் அதிகரிக்கின்றன. ஆகக் கடைசியாக, பினாங்கு புக்கிட் பெண்டேரா எம்.பி. சியர்லீனா அப்துல் ரஷீத், ஹடி ஆவாங்கிற்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளார்.

அந்த மதவாதியின் ஒவ்வொரு அறிக்கையும், குற்றவியல் அவதூறாகும் என்பதுடன், நிந்திக்கும் தன்மை கொண்டதாகும். பிற இனத்தவர்களுக்கு எதிராக மலாய்க்காரர்களைத் தூண்டி விடும் ஹடி ஆவாங்கின் செயல் மிக ஆபத்தானதாகும் என்று அந்த எம்.பி. தமது போலீஸ் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து அதன் வாயிலாக குளிர் காய்வதற்குத் துடிக்கும் ஹடி ஆவாங்கிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சியர்லீனா வலியுறுத்தியுள்ளார்.

Related News

சனாதன தர்மம்: தேவஸ்தானத்தின் அதிரடி செய்தியாளர் சந்திப்பு

சனாதன தர்மம்: தேவஸ்தானத்தின் அதிரடி செய்தியாளர் சந்திப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது