இந்த நாட்டில் மலாய்க்காரர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், பகிரங்கமாக ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் இனத்துவேச தன்மையில் பேசி வரும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி ஆவாங்கிற்கு எதிராக போலீஸ் புகார்கள் அதிகரிக்கின்றன. ஆகக் கடைசியாக, பினாங்கு புக்கிட் பெண்டேரா எம்.பி. சியர்லீனா அப்துல் ரஷீத், ஹடி ஆவாங்கிற்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளார்.
அந்த மதவாதியின் ஒவ்வொரு அறிக்கையும், குற்றவியல் அவதூறாகும் என்பதுடன், நிந்திக்கும் தன்மை கொண்டதாகும். பிற இனத்தவர்களுக்கு எதிராக மலாய்க்காரர்களைத் தூண்டி விடும் ஹடி ஆவாங்கின் செயல் மிக ஆபத்தானதாகும் என்று அந்த எம்.பி. தமது போலீஸ் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து அதன் வாயிலாக குளிர் காய்வதற்குத் துடிக்கும் ஹடி ஆவாங்கிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சியர்லீனா வலியுறுத்தியுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


