Jul 2, 2026
Thisaigal NewsYouTube
4 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

4 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.02-

சிலாங்கூரில் ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் போதைப்பொருள் கடத்திய நான்கு கும்பல்களைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிலாங்கூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 84 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பல்வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.

முதல் சோதனை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 2ஆவது முனையத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். உள்ளூரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளரான 42 வயது நபர் கைது செய்யப்பட்டது மூலம் 12.3 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பல்வேறு குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ள அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அடுத்தடுத்த கைது நடவடிக்கையும் போதைப்பொருள் கைப்பற்றலும் நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்