Dec 3, 2025
Thisaigal NewsYouTube
4 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

4 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.02-

சிலாங்கூரில் ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் போதைப்பொருள் கடத்திய நான்கு கும்பல்களைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிலாங்கூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 84 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பல்வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.

முதல் சோதனை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 2ஆவது முனையத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். உள்ளூரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளரான 42 வயது நபர் கைது செய்யப்பட்டது மூலம் 12.3 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பல்வேறு குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ள அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அடுத்தடுத்த கைது நடவடிக்கையும் போதைப்பொருள் கைப்பற்றலும் நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்