May 6, 2026
Thisaigal NewsYouTube
பாலிங்கில் கத்திக் குத்துத் தாக்குதலில் பெண் பலி: மூதாட்டி படுகாயம்
தற்போதைய செய்திகள்

பாலிங்கில் கத்திக் குத்துத் தாக்குதலில் பெண் பலி: மூதாட்டி படுகாயம்

Share:

பாலிங், டிசம்பர்17-

நேற்று கம்போங் பாரு பாக்காயிலுள்ள ஒரு வீட்டில், கூரான ஆயுதத்தால் ஆடவர் நடத்திய தாக்குதலில், பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது தாயார் படுகாயமடைந்தார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, 60 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது 80 வயது தாயார் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் பாலிங் போலீஸ் தலைவர் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ தெரிவித்துள்ளார்.

அறிவுசார் குறைபாடு கொண்ட அந்த 21 வயது ஆடவர், இரு பெண்களையும் கூரான ஆயுதத்தால் தாக்குவதற்கு முன்பு, கோபத்தில் அங்கும் இங்கும் ஓடியதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அந்த ஆடவரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தாகவும் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காகவும், பிரிவு 307-இன் கீழ் கொலை முயற்சியாகவும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்