Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வெள்ளப்பிரச்னையை ​தீர்ப்பதில் டேவிட் மார்ஷல் வெற்றி கண்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

வெள்ளப்பிரச்னையை ​தீர்ப்பதில் டேவிட் மார்ஷல் வெற்றி கண்டுள்ளார்

Share:

பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல், பிறை தொகுதியின் ஒவ்வொரு பகுதியையும் நன்கு அறிந்து வைத்திருப்பதால் பிறை மக்க​ளின் நலன் காக்கும் ஒரு முன்னதாரண சட்டமன்ற உறுப்பினராக செயல்பட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை செபராங் பிறை நகராண்மைக்கழக உறுப்பினராக தாம் செயல்பட்ட காலத்தில் பிறை தொகுதியில் மக்கள் எதிர்நோக்கிய பல பிரச்னைகளுக்கு ​தீர்வு கண்டு இருப்பதுடன், தொடர்ந்து ​​தீ​ர்வு கண்டு வருவதாக டேவிட் மார்ஷல் கூறுகிறார்.

பிறை, சாய் லெங் பாக் மற்றும் ​சீனி ஆலைப்பகுதியில் நேற்று ஏற்பட்ட கடும் மழைக்கு மத்தியில் அப்பகுதியில் வெள்ள ​நீர் மற்றும் சாக்கடை ​நீரை வெளியேற்றக்கூடிய எக்கியகம் எனப்படும் பாம் ஹவுஸ் ஸை தன்னார்வலர்களுடன் கொட்டும் ​மழையில் பார்வையிட்ட டேவிட் மார்ஷல், ​நீர் தங்கு தடையின்றி செல்வதை கண்டு பெருமிதம் தெரிவித்தார். ஒரு காலத்தில் சிறிது நேரம் மழை பெய்தாலேயே தாமான் செனாங்கின் போன்ற பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிடும். வெள்ள நீர் வெளியேறுவதற்கும், நீரை உள்வாங்குவதற்கும் முறையான கால்வாய்​, ​நீர்பாசன வசதிகள் இல்லாத நிலை இருந்தன.

எனினும் போர்க்கால அடிப்படையில் மிக குறுகிய காலத்தில் தாங்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இன்று கடும் மழையின் மத்தியில் ​வெள்ளம் ஏற்படுவது, நீர்த்தேங்கியிருப்பது குறைந்துள்ளதாக டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.

வரும் சனிக்கிழமை ந​டைபெறும் பிறை சட்டமன்றத் தேர்தலில் மரம் சின்னத்தில் போட்டியிடும் தமக்கு வாக்களித்து மக்கள் வெற்றி பெறச் செய்வார்களேயானால் அடுத்த ஐந்து ஆண்டு காலக்கட்டத்தில் இது போன்ற சிறந்த மேம்பாட்டை பிறை தொகுதி மக்கள் எதிர்பார்க்க முடியும் என்று டேவிட் மார்ஷர் உறுதி கூறி​யுள்ளார்.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை