May 5, 2026
Thisaigal NewsYouTube
2027-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் பதிவு பிப்ரவரி 15 முதல் தொடக்கம்: தகுதித் தேர்வு கிடையாது
தற்போதைய செய்திகள்

2027-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் பதிவு பிப்ரவரி 15 முதல் தொடக்கம்: தகுதித் தேர்வு கிடையாது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.28-

6 வயதுடைய சிறுவர்கள் உட்பட 2027-ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பதிவு வரும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 31 வரை நடைபெறும்.

மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பதிவுகளை MOEIS எனப்படும் Integrated Management System இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

மலேசியக் பிரஜைகளாக இருக்கும் பின்வரும் வயதுக் குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இந்தப் பதிவு திறக்கப்பட்டுள்ளது:

• 6 வயது அல்லது 5 வயது பிளஸ் (5+): 2 ஜனவரி 2021 முதல் 31 டிசம்பர் 2021-க்குள் பிறந்தவர்கள்.

• 7 வயது அல்லது 6 வயது பிளஸ் (6+): 2 ஜனவரி 2020 முதல் 1 ஜனவரி 2021-க்குள் பிறந்தவர்கள்.

"2027 முதல் 6 வயது அல்லது 5 வயது பிளஸ் (5+) பூர்த்தியான குழந்தைகள், எந்தவொரு தகுதித் தேர்வோ அல்லது நுழைவுத் தேர்வோ இன்றி நேரடியாகவும் தன்னார்வத்துடனும் முதலாம் ஆண்டில் இணையலாம் என்ற அரசாங்கத்தின் புதிய கொள்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

2027-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் பதிவு பிப்ரவரி 1... | Thisaigal News