Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கெடா மந்திரி பெசார் சனூசிக்கு எதிராக போலீஸ் புகார்கள் அதிகரிக்கின்றன
தற்போதைய செய்திகள்

கெடா மந்திரி பெசார் சனூசிக்கு எதிராக போலீஸ் புகார்கள் அதிகரிக்கின்றன

Share:

ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தரப்பிடம் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறி வரும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் மற்றும் பிரபல இணைய எழுத்தாளர் ராஜா பெட்ரா கமாருதீன்- க்கு எதிராக அதிகமான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வருகின்றன.

பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவு மற்றும் அதன் உயர்மட்டத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் இந்த புகார்களை செய்து வருகின்றனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் முயற்சிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இணைய எழுத்தாளர் ராஜா பெட்ரா அண்மையில் பகிரங்கமாக அறிவித்து உள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் அப்படியொரு திட்டத்தை தாங்கள் கொண்டு இருப்பதாக கெடா மந்திரி பெசார் சனூசி ஒப்புக்கொண்டது தொடர்பில் போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இப்போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வருவதாக பிகேஆர் கட்சியின் இளைஞர் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்கு தெரிவித்துள்ள ஆதரவை நிரூபிப்பதற்கு நாடாளுமன்றத்தில் எந்த நேரத்திலும் பலப்பரீட்சையில் ஈடுபட தாம் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்து விட்டார்.

பிரதமரின் அறிவிப்புக்கு பின்னரும் நாட்டில் அரசியல் குழப்பத்தை விளைவிக்க முற்படும் தரப்பினருக்கு எதிராக போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று 13 போலீஸ் புகார்களில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்