கோலாலம்பூர், ஜன - 9
இன்ஸ்டாகிராமில் 135 வெள்ளிக்கு மட்டுமே விற்கப்பட்ட னைக் ஏர் ஜோர்டன் காலணியை வாங்க முற்பட்ட ஓர் ஆடவன் ஏமாற்றப்பட்டு 5,000 வெள்ளியை இழந்தார்.
போலீசார் மற்றும் குடியேற்றத்துறையினர்கள் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி கூடுதல் கட்டணம் செலுத்த விற்பனையாளர் தம்மை வலியுறுத்தியதாக அந்நபர் தெரிவித்தார்.
பின் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அந்த 30 வயதுடைய ஆடவர் துன் எச்எஸ் லீ காவல்நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை instagram - மில் போடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்து அந்நபர் காலணியை வாங்க முடிவெடுத்ததாக அறியப்படுகிறது.







