பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கத்தில் தாம் பிரதமராக இருந்த போது, அப்போதைய சட்டத்துறை தலைவர் அபாண்டி அலியை தாம் நீக்கியது சரி என்பதற்கு பேங்க் நெகாராவின் முன்னாள் கவர்னர் டான் ஸ்ரீ ஜெட்டி அஜீஸ், நீதிமன்றத்தில் அளித்துள்ள சாட்சியமே சான்றாகும் என்று துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
1எம்.டி.பி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்து சட்டத்துறை தலைவர் என்ற முறையில் அபாண்டி அலி யிடம் தாம் புகார் அளித்தும், அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜெட்டி அஜீஸ், நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து இருந்தார்.
சட்டத்துறை தலைவர் பதவியிலிருந்து அபாண்டியை அலியை நான் எதற்காக நீக்கினேன் என்பதற்கு சரியான காரணங்கள் இருக்கும் பட்சத்தில், தமது பதவி நீக்கத்தை எதிர்த்து 22 லட்சம் வெள்ளி இழப்பீடு கோரி, அபாண்டி அலி , என் மீதும் ,அரசாங்கத்தின் மீதும் தொடுத்திருந்த வழக்கை அன்றைய பிரதமர்இஸ்மாயில் சப்ரி யாக்கோப், எதற்காக நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள முற்பட்டார் என்று துன் மகாதீர் கேள்வி எழுப்பினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


