May 6, 2026
Thisaigal NewsYouTube
மேம்படுத்தப்பட்ட புதிய அடையாள அட்டைகளைப் பெற அவசரப்பட வேண்டாம் – உள்துறை அமைச்சு
தற்போதைய செய்திகள்

மேம்படுத்தப்பட்ட புதிய அடையாள அட்டைகளைப் பெற அவசரப்பட வேண்டாம் – உள்துறை அமைச்சு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

மேம்படுத்தப்பட்ட புதிய அடையாள அட்டைகளைப் பெற மலேசியர்கள் அவசரப்படத் தேவையில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த செயல்முறை அமைப்பு, முழுமையாகத் தயாரான பின்னரே அது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய அடையாள அட்டையானது, படிப்படியாக நான்கு கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள முதல் கட்ட நடவடிக்கைகளானது, அடையாள அட்டையின் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், இரண்டாம் கட்டத்தில், இந்தப் புதிய அடையாள அட்டையானது, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்டமானது நாடு தழுவிய நிலையில், முகவர்கள் மற்றும் சேவை அமைப்புகள் மூலம் QR அடிப்படையிலான சரிபார்ப்பு முறைகளின் படி வழங்கப்படும் என்றும் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்