கிள்ளான், ஜாலான் கெபூன் அருகில் கால்வால் ஓரத்தில் ஆடவரின் எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்ப்டடுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணியளவில் ஓர் ஆடவரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்ற போலீசார், எலும்புக்கூடு கிடப்பது குறித்து தகவல் அளிக்கப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார். அந்த எலும்புக்கூடு, கால்வாயில் செல்லும் நீர்குழாயில் சிக்கிக்கிடந்தது தெரியவந்துள்ளது. தடயவியல் சோதனைக்காக அந்த மனித எலும்புக்கூடு, ஷா ஆலாம் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது


