கோலாலம்பூர் மாநகரில் மினி டாக்கா என்று அழைக்கப்படும் ஜாலான் சிலாங் – கில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக போலீசார் இன்று காலையில் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
உள்துறை அமைச்சு மற்றும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் கீழ் உள்ள கலாட் படை உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களும், அதிகாரிகளும் மேற்கொண்ட இந்த சோதனை நடவடிக்கை காலை 11 மணியளவில் புடு விற்கு அருகில் தொடங்கியது.
ஆயுதம் தாங்கிய போலீசார் ஜாலான் சிலாங்- ங்கில் உள்ள ஒரு கட்டடத்தின் நான்கு தொகுதிகளில் அதிரடியாக களம் இறக்கப்பட்டனர். . .
பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்ற இந்த சோதனை நடிவடிக்கையில் சட்டவிரோதக் குடியேறிகள் என்று நம்பப்படும் வங்காளதேசம், நேபால், மியன்மார் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 101 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்டவர்கள் அனைவரும் லோரிகள் மூலம் ஏற்றப்பட்டு கோலாலம்பூர், போலீஸ் பயிற்சி மையமான PULAPOL- லில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.








