May 1, 2026
Thisaigal NewsYouTube
AG மௌனம் சாதிப்பது ஏன்?
தற்போதைய செய்திகள்

AG மௌனம் சாதிப்பது ஏன்?

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப், குற்றவாளி என்று உறுதிசெய்து, 12 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்த, நீதிபதி நஸ்லான் கஸாலிக்கு எதிராக கூறப்படும் லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு குறித்து சட்டத் துறை தலைவர் இட்ரூஸ் ஹருன் எதுவும் கருத்துரைக்காமல் மௌனம் சாதித்து வருவது ஏன் என்று கேள்வி எழுப்பட்டுள்ளது.

நஜீப் சம்பந்தப்பட்ட SRC International வழக்கில், உயர் நீதிமன்ற விசாரணை நீதிபதி என்ற முறையில் நஸ்லான் கஸாலிக்கு, தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சங்கள் இருந்துள்ளன என்று கூறப்படும் குற்றச் சாட்டு தொடர்பில், எதிர் வினையாற்ற சட்டத்துறைத் தலைவர் இட்ரூஸ் ஹருன் தவறியிருப்பது ஏன் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் 14 முன்னாள் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போது அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக விளங்கும் முகமட் நஸ்லானின் பெயருக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கலங்கத்தைத் துடைக்க, சட்டத்துறைத் தலைவர் தவறிவிட்டதாக, வழக்கறிஞர் மன்றத்தின் அந்த 14 தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி