Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பலத்த காற்றினால் மேற்கூரைகள் பறந்தன
தற்போதைய செய்திகள்

பலத்த காற்றினால் மேற்கூரைகள் பறந்தன

Share:

சிலாங்கூர், அம்பாங், தாமான் அம்பாங் ஹிலிரில் பெய்த கனத்த மழை மற்றும் புயலினால் அங்குள்ள அடுக்குமாடி வீட்டு குடியிருப்புப்பகுதி மற்றும் கடைகளின் மேற்கூரைகள் பறந்தன. இந்தச் சம்பவத்தினால் ​மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அந்த குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதில் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார். எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 4.49 மணி அளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்பு படையினர் அவசர அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து பண்டான் மீட்பு தீயணைப்பு நிலையத்திலிருந்து ஐந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று அமாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து