சிலாங்கூர், அம்பாங், தாமான் அம்பாங் ஹிலிரில் பெய்த கனத்த மழை மற்றும் புயலினால் அங்குள்ள அடுக்குமாடி வீட்டு குடியிருப்புப்பகுதி மற்றும் கடைகளின் மேற்கூரைகள் பறந்தன. இந்தச் சம்பவத்தினால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அந்த குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதில் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார். எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 4.49 மணி அளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்பு படையினர் அவசர அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து பண்டான் மீட்பு தீயணைப்பு நிலையத்திலிருந்து ஐந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று அமாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


