நாடு தழுவிய நிலையில் சில எண்ணெய் நிலையங்களில் டீசல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை பிரதான எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் டகாங்ஙான் பெர்ஹாட் இன்று உறுதி படுத்தியது.
டீசல் எண்ணெய் பற்றாக்குறை, வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் தொடரும் என்று பெட்ரோனாஸ் டகாங்ஙான் பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எண்ணெய் பற்றாக்குறையினால் சில எண்ணெய் நிலையங்களில் டீசல் கிடைக்காதது குறித்து தனது வாடிக்கையாளர்களிடம் பெட்ரோனாஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.








