உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் சாலாஹுடின் ஆயுப்ப்பின் மறைவைத் தொடர்ந்து அந்த சோகம் இன்னும் மறையாத நிலையில் அவரின் நாடாளுமன்றத் தொகுதியான பூலாய்யில் போட்டியிடுவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படும் கெராக்கான் கட்சித் தலைவர் டோமினிக் லாவ் தொடர்ந்து பல்வேறு தப்பினரின் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார்.
மக்களின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளாகி வரும் டோமினிக் லாவ், அந்த செய்தியை தமது டுவிட்டர் கணக்கிலிருந்து மீட்டுக்கொண்டு விட்டார் என்று கூறப்பட்ட போதிலும் அந்த செய்தியை தாம் பதிவேற்றம் செய்யவில்லை என்று வாதிட்டு வருகிறார். தமது டுவிட்டர் கணக்கு, பொறுப்பற்ற நபரால் ஊடுரவப்ட்டு, இப்படியொரு தவறான செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டு தமக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக்கட்சியான கெராக்கானின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஶ்ரீ ஹர்த்தாமாஸ் போலீஸ் நிலையத்தில் டோமினிக் லாவ் புகார் செய்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


