உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் சாலாஹுடின் ஆயுப்ப்பின் மறைவைத் தொடர்ந்து அந்த சோகம் இன்னும் மறையாத நிலையில் அவரின் நாடாளுமன்றத் தொகுதியான பூலாய்யில் போட்டியிடுவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படும் கெராக்கான் கட்சித் தலைவர் டோமினிக் லாவ் தொடர்ந்து பல்வேறு தப்பினரின் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார்.
மக்களின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளாகி வரும் டோமினிக் லாவ், அந்த செய்தியை தமது டுவிட்டர் கணக்கிலிருந்து மீட்டுக்கொண்டு விட்டார் என்று கூறப்பட்ட போதிலும் அந்த செய்தியை தாம் பதிவேற்றம் செய்யவில்லை என்று வாதிட்டு வருகிறார். தமது டுவிட்டர் கணக்கு, பொறுப்பற்ற நபரால் ஊடுரவப்ட்டு, இப்படியொரு தவறான செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டு தமக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக்கட்சியான கெராக்கானின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஶ்ரீ ஹர்த்தாமாஸ் போலீஸ் நிலையத்தில் டோமினிக் லாவ் புகார் செய்துள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


