முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக், சிறைச் சாலையில் தொடர்ந்து தண்டனை அனுபவித்து வருவதைக் காட்டிலும், அவருக்கு அரச மன்னிப்பு வழங்குவது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் சிறந்த வழிமுறையாகும் என்று சிலாங்கூர் பாஸ் கட்சி தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
நஜீப்பின் SRC International லஞ்ச ஊழல் வழக்கிற்குத் தலைமை ஏற்ற நீதிபதி நஸ்லான் கஸாலிபற்றிய சில தகவல்கள் அம்பலமானதைத் தொடர்ந்து, நஜீப்பிற்குப் பொது மன்னிப்பு வழங்குவது ஏற்புடையதே என்று பாஸ் கட்சியின் சுபாங் தொகுதித் தலைவர் சகாருடீன் முகமட் குறிப்பிட்டார்.
நஜீப் சம்பந்தப்பட்ட வழக்கில், நீதிபதி நஸ்லான் தொடர்புடைய நல சார்ந்த அம்சங்கள் இருப்பதாக கூறப்படுவதைத் தொடர்ந்து, நஜீப்பிற்கு எதிரான விசாரணை இஸ்லாத்தின் வழிகாட்டல் முறைக்கு ஏற்ப நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளதாக சகாருடீன் தெரிவித்தார்.

Related News

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்


