Aug 12, 2026
Thisaigal NewsYouTube
அலோங் கும்பலைச் சேர்ந்த மூவர் குற்றஞ்சாட்டப்படுவர்
தற்போதைய செய்திகள்

அலோங் கும்பலைச் சேர்ந்த மூவர் குற்றஞ்சாட்டப்படுவர்

Share:

ஜோகூர் பாரு, மே.27-

லைசென்ஸின்றி பணத்தை வட்டிக்குக் கொடுத்து, கடன் பெற்றவர்களின் வீடுகளில் சிவப்புச் சாயம் வீச்சு நடத்தி, மிரட்டி வந்ததாக நம்பப்படும் அலோங் கும்பலைச் சேர்ந்த மூவர் நாளை ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

24 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று சந்தேகப் பேர்வழிகள் கடந்த மே 14 ஆம் தேதி ஜோகூர் பாரு வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடனைச் செலுத்தத் தவறியவர்களின் வீடுகளைத் திறக்க முடியாத அளவிற்கு பூட்டுவது, சிறப்புச் சாயம் வீச்சு நடத்துவது, அச்சுறுத்துவது போன்ற குற்றச்செயல்களில் இந்த மூவரும் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

Related News