Jul 2, 2026
Thisaigal NewsYouTube
அடையாம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட ஆடவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

அடையாம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட ஆடவர் படுகாயம்

Share:

சுங்கை பட்டாணி, செப்டம்பர்.22-

அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட 30 வயது இளைஞர் ஒருவர் கடும் வெட்டுக் காயங்களுக்கு ஆளானார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் சுங்கை பட்டாணி, பாயா நாஹு அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் பிளாக் A5 கட்டடத் தொகுதியில் நிகழ்ந்தது.

கடும் காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர், அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் தனது அண்ணனின் வீட்டிற்குச் சென்றிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

தனது அண்ணன் வீட்டில் இல்லை என்று அவரின் அண்ணி கூறியுள்ளார். தனது அண்ணன் வரும் வரை பிளாக் A5 கட்டடத் தொகுதியில் அந்த இளைஞர் காத்திருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் கூர்மையான ஆயுதத்துடன் அவ்விடத்திற்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆடவர், அந்த இளைஞரை சரமாரியாக ஆயுதத்தினால் தாக்கி காயம் விளைவித்துள்ளார் என்று கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

கைகளிலும், கால்களிலும் கடும் வெட்டுக் காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர், சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய சந்தேகப் பேர்வழி, காலை முதல் மதுபோதையில் இருந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த நபர் பின்னர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக ஏசிபி ஹன்யான் கூறினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்