Jul 4, 2026
Thisaigal NewsYouTube
அன்வாருக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி
தற்போதைய செய்திகள்

அன்வாருக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

Share:

புத்ராஜெயா, ஜூலை.21-

தனது முன்னாள் ஆய்வியல் உதவியாளர் ஒருவர் தொடுத்துள்ள பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

பாலியல் தாக்குதல் தொடர்பாக முன்னாள் உதவியாளர் ஒருவர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள சிவில் வழக்கில் அன்வார் முன் வைத்துள்ள அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் விடை காணும் வரையில் உயர் நீதிமன்ற விசாரணை ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ருஸிமா கஸாலி தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த சிவில் வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதற்கு ஏற்கனவே அப்பீல் நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கிய போதிலும், கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு தெரியும் வரை உயர் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்து வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று அப்பீல் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது