Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கனவுந்து மோதி முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கனவுந்து மோதி முதியவர் மரணம்

Share:

ஜோகூர், ஜாலான் சிம்பாங் ரெங்காங்கில் உள்ள ஜாலான் பத்து 47இல் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த முதியவர் ஒருவரை கனவுந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் துறந்தார்.

இன்று நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த ரெங்காம் தீயணைப்பு - மீட்ப்புப் படை நிலையத்தின் கொமான்டர் ஒபிராசி நோர்ஹுசாம் இவான் தெரிவிக்கயில், தமது தரப்புக்கு இன்று பிற்பகல் 2.57 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் 7 அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.

பயிர்களுக்கான உரத்தை ஏற்றி வந்த கனவுந்தின் ஓட்டுநருக்கு ஆபத்து ஏதும் ஏற்[அடாத நிலையில், மோட்டார் சைக்கிளோட்டியான அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக நோர்ஹுசாம் இவான் குறிப்பிட்டார்.

அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள காவல் துறையிடம் இவ்விவகாரம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

கனவுந்து மோதி முதியவர் மரணம் | Thisaigal News