சிகாமட், ஜன.27-
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜோகூர், சிகாமட்டில் இரண்டு முதியவர்களை பாராங்கினால் வெட்டிக்கொன்ற குற்றத்திற்காக ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஒருவருக்கு மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
39 வயது முகமட் ஹுசாய்ரி ரசாலி என்ற அந்த பால்வெட்டுத் தொழிலாளி, சம்பவம் நிகழும் போது, அவ்விடத்தில் இல்லை என்பதற்கு போதுமான ஆதாரங்களை நிரூபிக்கத் தவறிவிட்டார் என்றும், அவரின் வாதம் அறிவுக்கு பொருந்தவில்லை என்றும் நீதிபதி சூரிய குமார் டிஜெ போல் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் மாலை 5.50 மணியளவில் சிகமாட், பெக்கான் பூலோ காசாப், ஜாலான் அப்துல்லாவில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் 71 வயது Ku Cheng Abdullah மற்றும் 67 வயது Ng Wan Hong ஆகியோரை வெட்டிக்கொன்றதாக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த பால்வெட்டுத் தொழிலாளி குற்றஞ்சாட்டப்பட்டார்.







