பின்னால் வந்த லாரி மீது கார் மோதியதில், இரண்டு வாகனங்களும் திடீரெனத் தீப்பற்றி எரிந்தன. நேற்று காலை ஜாலான் மீரி பைபாஸ் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், ஸ்போர்ட்ஸ் கூப் காரை ஓட்டி வந்த 40 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சோகமான விபத்து குறித்து மிரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெர்மிஜெயா -விலிருந்து மிரி விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த ஸ்போர்ட்ஸ் கார், திடீரென வலது பக்கப் பாதையிலிருந்து இடது பக்கத்திற்கு மாறியதாகத் தெரிகிறது. அப்போது பின்னால் வந்த லாரி மீது கார் மோதியதில், இரண்டு வாகனங்களும் திடீரெனத் தீப்பற்றி எரிந்தன. காரின் உள்ளே சிக்கிக்கொண்ட ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், 34 வயதுடைய லாரி ஓட்டுநர் காயமின்றித் தப்பியதாக மீரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழூ விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








