ஜோகூர் மாநிலம்பாரிட் சூலோங் உள்ள எஸ்கே செரி மைமோன் பள்ளி வளாகத்தின் வெளியே, வேன் மோதி எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், அச்சிறுமியின் தந்தை, சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுநரை மன்னித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
விதியின் காரணமாக இத்துயர சம்பவம் நடந்துள்ளதாகவும், அதனை ஏற்றுக் கொள்வதாகவும் 39 வயதான அஹ்மத் ஃபரீஸ் காலித் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்பாராமல் நடந்த இச்சம்பவத்தின் காரணமாக, வேன் ஓட்டுநரை யாரை குற்றம் சாட்ட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று மே 5-ஆம் தேதி, நூர் ஐனி உமைரா முகமது ஃபரீஸ் என்ற எட்டு வயது மாணவி பள்ளி வாயிலுக்கு வெளியே வேன் மோதி பலியானார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








